நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் மரணத்தால் தமிழ் திரையுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த நிலையில் கோலிவுட் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. பிரபலங்களின் மரண சம்பவங்களில் ஊடகங்களுக்கு இனி அனுமதி கிடையாது என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. அஞ்சலி செலுத்த வரும் பிரபலங்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

அதற்கு முன்பே நடிகர் மாரிமுத்துவின் மரணம் ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஊடகங்கள் என்ற போர்வையில் சில யூடியூப் சானல் நிர்வாகிகள் புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு பணம் சம்பாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.