நாடே எதிர்பார்த்த 2025-26 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். அதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா பட்ஜெட் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் பிரதமர் மோடியின் இதயத்தில் என்றுமே நடுத்தர மக்கள் தான் இருக்கின்றனர். வருமான வரி விலக்கு உச்ச வரம்பை 12 லட்சம் ரூபாயாக உயர்த்திருப்பது நடுத்தர மக்களின் பொருளாதார சூழலை நீண்ட காலத்திற்கு வளப்படுத்தும் எனக் கூறியுள்ளார். இந்த அறிவிப்பால் பயனடைந்தவர்களுக்கு அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.