
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரோசாபாத் நகரில் கமல்பூர் ராகாவ்லி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பிரசவத்தின் போது ஒரு பெண் உயிரிழந்த நிலையில் துக்க நிகழ்வுக்காக பலர் சென்றனர். அப்போது திடீரென சுவர் இடிந்து விழுந்தது. இதில் 16 முதல் 17 பெண்கள் வரை சிக்கிக்கொண்டனர்.
இந்நிலையில் விபத்தில் சிக்கிக்கொண்ட பெண்கள் அனைவரும் மீட்கப்பட்ட நிலையில் 14 பெண்கள் பலத்த காயம் அடைந்தனர். மேலும் இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.