டெல்லியில் உள்ள மீரட் சாலையில் காசிபூர் பகுதி உள்ளது. இங்கு நேற்று இரவு பயங்கர கார் விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த கார் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில்  காரில் இருந்த ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்த இளைஞர் நொய்டாவை சேர்ந்த அனில் என்பது தெரிய வந்தது.

இவருக்கு பிப்ரவரி 14-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் தன்னுடைய திருமணத்திற்காக பத்திரிக்கை கொடுக்க காரில் சென்றுள்ளார். அப்போதுதான் இந்த பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்துக்கான சரியான காரணம் கண்டறியப்படவில்லை. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.