
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேருந்து நிலையம் அருகே ஜெயலக்ஷ்மி ஜூவல்லர்ஸ் அமைந்துள்ளது. இந்த நகை கடையை பாலாஜி என்பவர் நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் 25-ஆம் தேதி ஒரு இளம்பெண் கைக்குழந்தையுடன் நகை கடைக்கு வந்து நகை வாங்குவது போல நடித்தார்.
அந்த இளம்பெண் கவரிங் நகையை வைத்துவிட்டு 2 பவுன் தங்க நகையை திருடி சென்றுள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு நகைகளை சோதனை செய்தபோது கவரிங் நகை இருந்தத தெரியவந்ததால் உடனடியாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது கடைக்கு வந்த இளம்பெண் நகையை திருடியது உறுதியானது. இதுகுறித்து பாலாஜி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அந்த இளம் பெண்ணை தேடி விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் உத்தண்டியூரை சேர்ந்த ராஜசேகரின் மனைவி ராதிகா(30) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் நகையை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.