அரியலூர் மாவட்டம் நரசிங்க பாளையம் வாக்குச்சாவடி அருகே, விசிக – பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் இருவரின் மண்டை உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக 2 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர்.

பதற்றமான வாக்குச்சாவடி என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விசாரணையில் வாக்குப்பதிவு மையத்திற்குள் பிரசாரம் செய்ததாக இரு தரப்பினரும் மாறி மாறி கூறிவருகின்றனர்.