தமிழ்நாடு பாஜகவில் இருந்து சமீபத்தில் இரண்டாவது முறையாக திருச்சி சூர்யா சிவா நீக்கப்பட்டார். அவரது நடவடிக்கைகள் கட்சிக்கு எதிராக இருப்பதாக கூறி அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக சமீபத்தில் பாஜக தலைமை அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது திருச்சி சூர்யா பாஜகவிற்கு எதிராக அடுக்கடுக்காக பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

அதாவது மணல் கடத்தல் கும்பலுடன் பாஜகவிற்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்களிடமிருந்து மாதம் 50 கோடி ரூபாய் முதல் 80 கோடி ரூபாய் வரை பாஜகவினர் பணம் பெறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பணம் பெறுபவர்கள் பட்டியலை விரைவில் வெளியிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ள நிலையில் பாஜகவினர் மத்தியில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.