உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள பாஜக தலைவர் குல்பாம் சிங் யாதவ் (Gulfam Singh Yadav) கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 60 வயதான யாதவ், தப்தாரா கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் இருந்தபோது, மூன்று மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து அவரை சந்தித்து, கால்களைத் தொட்டு வணங்கி, பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது, அவர்களில் ஒருவர் எதிர்பாராத வகையில், குல்பாம் சிங்கின் வயிற்றில் ஊசி ஒன்று செலுத்தினார். இதைத்தொடர்ந்து உடனடியாக அனைவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

குல்பாம் சிங் யாதவ் அவர்களை துரத்த முயன்றாலும், சில அடிகள் நடந்து சென்றவுடன் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். அவரது குடும்பத்தினர், அவரை உடனடியாக குன்னூர் சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் அவரது நிலைமை மோசமாக இருப்பதால், அலிகார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். இந்த கொலையை முன்விரோதம் காரணமாக செய்திருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலையில் பயன்படுத்தப்பட்ட ஊசி சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது, மேலும் அதில் எந்த வகையான மருந்து இருந்தது என்பதை கண்டறிய ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இந்த கொலை சம்பவம் சம்பல் மாவட்டத்திலும், உத்தரப் பிரதேச பாஜகவினரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப் பதிந்து, குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவரது கொலையை அரசியல் பழிவாங்கலாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் குல்பாம் சிங் யாதவ், 2004-ம் ஆண்டு குன்னூர் இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் முலாயம் சிங் யாதவை எதிர்த்து போட்டியிட்டவர். அவர் முன்னாள் ஆர்எஸ்எஸ் (RSS) மாவட்ட செயல்பாட்டாளராகவும், பாஜகவின் (BJP) மாவட்ட பொதுச் செயலாளராகவும், மேற்கு உத்தரப் பிரதேசத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் அவர் நூதன முறையில் கொல்லப்பட்டது .