
திமுக அமைச்சர் கே.என் நேரு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நயினார் நாகேந்திரன் திமுகவை ஆட்சியில இருந்து அகற்றுவேன் என்று கூறிதான் பாஜக கட்சியின் மாநில தலைவராக மாறியுள்ளார். அவர் தலைவராவதற்கு முன்பாக எங்களிடம் என்ன பேசினார் என்பதை பொதுவெளியில் என்னிடம் கூற முடியாது.
முதலில் அவர்கள் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இருக்கும் பிரச்சனையை சரி செய்துவிட்டு பின்னர் கூட்டணி ஆட்சியா இல்லை எனில் தனித்து ஆட்சியா என்பதை அறிவிக்கட்டும். முதலில் அவர்கள் இதனை முடிவு செய்துவிட்டு பின்னர் எங்களிடம் பேசட்டும்.
நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் வருகிற 8-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெறுகிறது. சேதுமடைந்த சாலைகளை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இந்த வருடம் சிறப்பான முறையில் தேரோட்டத்தை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.