பாஜகவில் சேரச்சொல்லி கோடிக்கணக்கில் பேரம் பேசியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர பாஜக ரூ.20-25 கோடி தருவதாக குதிரை பேரம் செய்ததாக ஜலாலாபாத் ஆம் ஆத்மி எம்எல்ஏ கோல்டி காம்போஜ் மற்றும் இரண்டு கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளார்.

மூன்று ஆம் ஆத்மி தலைவர்களும் பாஜகவுடன் தொடர்புடையவர்களிடமிருந்து தங்களுக்கு அழைப்புகள் வந்ததாகவும், கட்சி விலகுவதற்கு கோடிகளை வழங்குவதாகவும் குற்றம் சாட்டினர். அழைப்புகள் வந்த எண்களையும் தலைவர்கள் பகிர்ந்து கொண்டனர். இவர்களில் ஒருவர் சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்று எம்எல்ஏ ஒருவர் தெரிவித்தார்.