பிரியங்கா காந்தியின் நண்பரும், பஞ்சாப் மாநில மூத்த தலைவருமான தஜிந்தர் சிங் பிட்டு காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அவரது விலகல் காங்கிரஸ்க்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர், ஹிமாச்சலப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்த அவர், இன்று டெல்லி பாஜக அலுவலகத்திற்கு சென்று தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.