திருப்பூர் மாவட்டத்திலுள்ள பிஎன் ரோடு பகுதியில் ஒரு 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் குமார் நகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பல் சம்பந்தமான பிரச்சனைக்காக ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வந்தார். அந்தப் பெண் டாக்டரின் அறிவுரையின்படி 15 நாட்களுக்கு ஒரு முறை ஹாஸ்பிடல் சென்ற நிலையில், கடந்த 15ஆம் தேதியும் வழக்கம் போல் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அப்போது அங்கு டாக்டர் ஸ்டீபன் (30) என்பவர் பணியில் இருந்தார். இவர் அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த நிலையில் உடனடியாக அந்தப் பெண் தன் பெற்றோருக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வரவழைத்தார். இது தொடர்பாக காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசார் டாக்டர் ஸ்டீபன் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவர் தலைமறைவாகி விட்டதால் தற்போது அவரை தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.