
வேலூர் மாவட்டம் கீழ் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (30). தனியார் மருத்துவமனையில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் ரவிக்குமார் அவ்வபோது கட்டிட மேஸ்திரயாகவும் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி விஜயசாந்தி(23).
இந்த தம்பதியினருக்கு 4 மற்றும் 3 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். விஜயசாந்தி ஷூ கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக ரவிக்குமார் தனது மனைவி மீது சந்தேகம் பட்டு அவரை அடிக்கடி தாக்கியுள்ளார்.
சம்பவம் நடந்த அன்று மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் ரவிக்குமார் கத்தியால் மனைவியின் தலை, முகம், கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த விஜயசாந்தியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே விஜயசாந்தி பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகும் ரவிக்குமார் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மருத்துவமனையில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து உயிரிழந்த விஜயசாந்தியின் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.
இது குறித்து மருத்துவர்கள் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ரவிகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.