சென்னை முகப்பேர் பகுதியில் காரை நிறுத்தியது தொடர்பாக பிக் பாஸ் புகழ் நடிகர் தர்ஷனுக்கும் நீதிபதியின் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் காயமடைந்த நீதிபதியின் மகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தர்ஷனை கைது செய்தனர். நடிகர் தர்ஷன் மற்றும் லோகேஷ் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தர்ஷன் அளித்த புகாரின் பேரில் போலீசார் நீதிபதியின் மகன், அவரது மனைவி மாமியார் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.