விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்கேஜி படிக்கும் 4 வயது லியா லட்சுமி என்ற சிறுமி  செப்டிக் டேங்க் தொட்டிக்குள் விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் வகுப்பு ஆசிரியர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நல குழுவினர் தனியார் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். இரண்டு பெண்கள் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழுவினர் பள்ளியில் ஆய்வு நடத்தி வருகின்றனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெருமாளுடன் குழந்தைகள் நல குழுவினர் ஆலோசனை நடத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.