
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் அவசரம் மற்றும் இயல்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை மையர் சாரதா தேவி மண்டல தலைவர்கள் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 12 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்குவதால் பாதிக்கப்படும் பொதுமக்கள், சாலை வசதிகளை தார் சாலையாக மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவாதம் நடந்தது.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி பேசும்போது வார்டு கவுன்சிலர்களுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் பணிகளை தொடங்கி வைக்கின்றனர். எனது வார்டில் பல்வேறு குறைகள் உள்ளது. எந்த குறைகளும் நிறைவேற்றப்படவில்லை. குறைந்த தொகைக்கு டெண்டர் கோரியவர்களுக்கு கொடுக்காமல் அதிக தொகை டெண்டர் கோரி அமைச்சரின் ஆதரவாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது என குற்றம் சாட்டினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் இடையே மோதல் ஏற்பட்டது ஒரு கட்டத்தில் 45 வது வார்டு திமுக கவுன்சிலர் சுகாசினி எதிர்க்கட்சித் தலைவர் யாதவ மூர்த்தியை கையால் தாக்கி கன்னத்தில் ஓங்கி அடித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தியுள்ளனர்.
இதனால் கூட்டம் முடிந்ததாக அறிவித்து தேசிய கீதம் பாடிய நிலையில் மைய அரங்க இருந்து புறப்பட்டு சென்றார். அதன் பிறகு யாதவமூர்த்தி கூறும் போது, ஆளுங்கட்சி அவளங்களை எடுத்து கூறினோம். நாங்கள் தவறாக எதுவும் பேசவில்லை. டென்டரிலும் கோடிக்கணக்கான லஞ்சம் கைமாறுகிறது.
45 வது வார்டு திமுக கவுன்சிலர் சுஹாசினி தகாத வார்த்தையால் என்னை பேசி தாக்கினார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும். இங்கிருந்து வெளியேற மாட்டோம் என கூறியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.