அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சட்ட விரோதமாக குடியேறிய நபர்களை வெளியேற்றி வருகிறார். அமெரிக்க குடியேற்றத்திற்கான கொள்கைகளை கடுமையாக்கியதால் அதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நடவடிக்கையை கண்டித்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்கா பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளிநாட்டினரை வெளியேற்றி வருவதை கைவிட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறி வருகின்றனர்.

இதனால் தேசிய காவல் படையினர் கண்ணீர் புகை குண்டு, ரப்பர் குண்டுகள் மூலம் போராட்டக்காரர்களை கலைக்க முயற்சி செய்வதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. தற்போது சோசியல் மீடியாவில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் ஆப்பிள் ஷோரூமுக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து அங்குள்ள பொருட்களை அள்ளி சென்றனர்.

அந்த நிறுவனத்தின் கண்ணாடி கதவுகளை உடைத்து உள்ளே இருந்த லேப்டாப், செல்போன் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை அள்ளி சென்ற கட்சிகள் அதில் பதிவாகியுள்ளது. போலீசார் அங்கு சென்றவுடன் சைரன் சத்தம் கேட்டு அந்த நபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.