பொதுவாக திருமணங்களின் போது வரதட்சணையாக கார், பணம், பைக், தங்க நகைகள் போன்றவற்றை கேட்பது வழக்கம். இது பற்றிய செய்திகள் கூட வெளியாகியுள்ளது. ஆனால் இங்கு ஒரு பெண்ணிடம் வரதட்சணையாக கிட்னியை கேட்டுள்ளனர். இந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது.

அதாவது முசாபர்பூர் பகுதியில் தீப்தி என்ற பெண் வசித்து வரும் நிலையில் இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த பெண்ணிடம் கணவனின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்ட நிலையில் அவரால் கொண்டுவர முடியாததால் பின்னர் கிட்னியை மாமியார் கேட்டுள்ளார்.

அதாவது அவருடைய கணவனுக்கு உடல் நலக்குறைவு இருந்ததால் கிட்னியை வரதட்சணையாக கொடுக்கும்படி மாமியார் தொடர்ந்து துன்புறுத்தி அவரை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். ஒரு கிட்னியை மட்டும் தன்னுடைய மகனுக்கு தானமாக கொடுக்கும்படி மாமியார் தொடர்ந்து டார்ச்சர் செய்த நிலையில் பின்னர் வீட்டை விட்டு வெளியே அனுப்பியதால் தீப்தி காவல் நிலையத்தில் இது பற்றி புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரின் படி காவல்துறையினர் மாமியார் உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.