
மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை விற்று பிரபலமானவர்தான் காந்த கண்ணழகி மோனலிசா. இவருடைய வைரலாகி வந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பார்த்து பாலிவுட் இயக்குனர் மனோஜ் மிஸ்ரா டைரி ஆஃப் மணிப்பூர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார். ஆனால் தற்போது மோனாலிசாவுக்கு பட வாய்ப்பு வழங்கிய அந்த இயக்குனர் பட வாய்ப்பு கொடுப்பதாக பெண் ஒருவரை ஏமாற்றிவிட்டதாக கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார் . மேலும் இவரின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் ரத்து செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளதால் மோனாலிசாவின் திரை உலக வாழ்க்கை கேள்விக்குறியாக மாறி உள்ளது .
மோனாலிசா திரைப்படத்தில் நடிக்காவிட்டாலும் அவர் ஏற்கனவே ஒரு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுவிட்டார். அதாவது கடை திறப்பு விழா, ஊர் திருவிழாவில் விருந்தினர் என பல நிகழ்ச்சிகளில் விருந்தினராக கலந்து கொண்டு வருகிறார். மேலும் மத்தியபிரதேசம் போன்ற பல மாநிலங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் விருந்தினராகவும் கலந்து கொண்டார் . மோனாலிசா இப்போதுதான் நடிக்க கற்று வருகிறார் என்பதால் உடனடியாக பட வாய்ப்பு கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் சீரியலில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. முக்கியமான சீரியல் ஒன்றில் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.