
மதியப் பிரதேசத்தின் ரீவா மாவட்டத்தில் உள்ள கார்ஹ் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பவுகாரி காட்டுப் பகுதியில், மே 7 ஆம் தேதி நடந்த கொடூரக் கொலை முழு மாவட்டத்தையும் பதறவைத்துள்ளது. அதாவது பிப்ரஹா கிராமத்தை சேர்ந்த அபிஷேக் திரிபாதி என்ற இளைஞர், தனது நண்பரான ராஜ்நீஷ் மிஷ்ரா மற்றும் அவரது கூட்டாளி ராஜ்குமார் கேவத் ஆகியோரால் திட்டமிட்டு கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். கொலை நடந்ததும், அந்தக் காட்சிகளை மொபைல் கேமராவில் பதிவு செய்து, அதனை அபிஷேக்கின் குடும்பத்தினருக்கு அனுப்பியதோடு, சமூக ஊடகங்களிலும் பரப்பியுள்ளனர்.
இந்த கொலையின் பின்னணி குறித்து போலீசார் விசாரித்ததில், அபிஷேக் மற்றும் ராஜ்நீஷ் இருவரும் பசு கடத்தலில் ஈடுபட்டிருந்ததாகவும், அதில் கிடைத்த பணத்தை பகிர்வதில் ஏற்பட்ட தகராறே கொலைக்கு காரணம் என்பதும் தெரியவந்துள்ளது. ராஜ்நீஷ், அபிஷேக்கை மது விருந்துக்காக அழைத்துச் சென்று காட்டுக்குள் கொண்டு சென்றுள்ளார். அங்கு திட்டமிட்டு, அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு வீடியோ எடுத்து வைரலாக்கியுள்ளனர். இது தொடர்பாக இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இன்னும் கிடைக்கவில்லை.
Rewa News: रूह कंपा देने वाली वारदात…दोस्तों ने काटा दोस्त का गला, डॉन बनना चाहते थे आरोपी#murdercase #crimenews #rewanews #madhyapradeshnews #mpnews #madhyapradesh pic.twitter.com/EWApUtlVxd
— INH 24X7 (@inhnewsindia) May 11, 2025
கொலை வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதும், அதனைக் கண்ட குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். போலீசார் உடனடியாக அந்த வீடியோவில் காட்டப்பட்ட இடத்தினை அடையாளம் கண்டுபிடித்து, பவுகாரி காட்டில் சென்று அபிஷேக்கின் சடலத்தை மீட்டனர். சம்பவத்திற்கு பிறகு பிரதான குற்றவாளி ராஜ்நீஷ் மற்றும் அவரது கூட்டாளி ராஜ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த கொலை சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகின்றது.மேலும் அந்த பகுதியில் ஊரடங்கு போன்ற பதற்றமான நிலை நிலவி வந்தாலும், போலீசார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.