
தெலுங்கானா மாநிலம் ஜகத்தியாலா மாவட்டம் கோட்டூர்லாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை செய்யப்பட்டது. அந்த சிலையை குடோனுக்கு தூக்கி சென்ற போது விநாயகர் சிலையின் மேல் பகுதி தெருவில் செல்லும் மின் கம்பியில் உரசி தீப்பிடித்துள்ளது. இந்த விபத்தில் 9 பேர் படுகாயமடைந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் குச்சி மூலம் மின் கம்பியை உயர்த்தி பிடித்து மின் இணைப்பை தற்காலிகமாக தடுத்து படுகாயமடைந்த 9 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
Sensitive Content
కోరుట్లలో ఘోర ప్రమాదం
వినాయక తయారీ కేంద్రం వద్ద జరిగిన కరెంట్ షాక్ ప్రమాదంలో ఇద్దరు మృతిచెందగా.. ఆరుగురి పరిస్థితి విషమం
ఈ ప్రమాదంలో వినాయక తయారీ కేంద్రం యజమాని అల్వాల వినోద్, కార్మికుడు బంటి సాయి మృతి pic.twitter.com/9TgNSmAdOT
— Telugu Scribe (@TeluguScribe) June 15, 2025
அங்கு சிலை உற்பத்தி நிறுவன உரிமையாளரான அல்வாலா வினோத், ஊழியர் நெலுட்லா பண்டி ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்ற 7 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.