
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மரூர் பண்ணை பகுதியில் நடைபெற்ற ஒரு சம்பவம் குறித்த வீடியோ வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது நில தகராறில் பெற்ற தாய் என்று கூட பாராமல் ஒரு மகன் அவரை கடுமையாக அடித்து தாக்குகிறார்.
அதோடு அந்தப் பெண்ணின் மருமகளும் கொடூரமாக அடிக்கிறார். வயதான மூதாட்டி என்று கூட பாராமல் கொடூரமாக இருவரும் அடிக்கிறார்கள். பெற்ற தாயின் மார்பின் மீது ஏறி அந்த மகன் மிதிக்கிறான். கம்பால் அடிக்கிறார்கள். இருவரும் சரமாரியாக அடித்து உதைத்த நிலையில் அது குறித்த வீடியோ வெளிவந்துள்ளது. அவருடைய மனைவி தன் மாமியாரை கட்டையால் அடித்ததோடு மட்டுமின்றி ஒரு காலை உடைத்துவிட்டார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளிவந்ததால் தற்போது அந்த மகன் மற்றும் மருமகன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.