சென்னை காசிமேட்டில் நேற்று நடைபெற்ற சோகமான சம்பவத்தில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அசாருதீன் என அடையாளம் காணப்பட்ட இளைஞர், இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது, பின்னால் வந்த மாநகர பேருந்து அவரது மீது மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.