
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் 27 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அவர்கள் மதத்தைக் கேட்டு குறி வைத்து தாக்குதல் நடத்தியதோடு ஆண்களை மட்டுமே கொலை செய்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஸ்கர் இ தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிடென்சி பிராண்டு என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில் பலர் தங்கள் உறவுகளை இழந்து தீரா துயரில் இருக்கும் நிலையில், தற்போது மனதை உலுக்கும் ஒரு புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
#WATCH | Delhi | Indian Navy Lieutenant Vinay Narwal’s wife bids an emotional farewell to her husband, who was killed in the Pahalgam terror attack
The couple got married on April 16. pic.twitter.com/KJpLEeyxfJ
— ANI (@ANI) April 23, 2025
அதாவது திருமணம் ஆகி 5 நாட்களாகும் நிலையில் இந்திய கடற்படை அதிகாரி வினய் என்பவர் தன் மனைவியுடன் ஹனிமூன் சென்றுள்ளார். இவருக்கு 26 வயது ஆகும் நிலையில் அவரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். என்ன செய்வதென்று தெரியாமல் தன் கணவனின் சடலத்தின் அருகே அந்த பெண் கலங்கி போய் இருக்கும் புகைப்படம் தான் சமூக வலைதளத்தில் வைரலாகி அனைவரின் மனதையும் கலங்க வைத்துள்ளது.
இந்நிலையில் தன்னுடைய கணவனுக்கு தற்போது அந்த பெண் கண்ணீரோடு கதறி அழுத அஞ்சலி செலுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகிய அனைவரின் நெஞ்சையும் கலங்க வைத்துள்ளது. அந்தப் பெண் கதறி அழுதபடியே தன் கணவரின் சடலத்தை கட்டிப்பிடித்தபடி அஞ்சலி செலுத்திய நிலையில் குடும்பத்தினர் அந்த பெண்ணை சமாதானப்படுத்தினார். மேலும் ஏப்ரல் 16ஆம் தேதி திருமணம் நடந்த நிலையில் தற்போது அவருடைய கணவன் கண்முன்னே சடலமாக இருப்பதை அந்த பெண்ணால் ஏற்றுக் கொள்ள முடியாமல் வேதனையில் தவிப்பது பலரையும் கலங்க வைத்துள்ள நிலையில் கண்டிப்பாக தீவிரவாதிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகிறது.