சமீபகாலமாகவே கள்ளக்காதல் மோகத்தால் கணவன்களை மனைவிகள் கொல்லும் சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஹனிமூனுக்கு கணவனை அழைத்து சென்று மனைவி ஒருவர் தீர்த்து கட்டினார். அதாவது தொழிலதிபர் ஒருவருடன் சோனம் என்ற பெண்ணுக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்ற நிலையில் அவர் ஹனிமூனுக்கு தன் கணவனை அழைத்து சென்று கள்ளக்காதலன் உதவியோடு கூலியாட்களை ஏவி கணவனை தீர்த்து கட்டினார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சோனத்தை நேற்று போலீசார் கைது செய்தனர்.

இதேபோன்று மீரட்டில் ‘நீல டிரம்’ கொலை வழக்கு:
மார்ச் 3 அன்று சௌரப் ராஜ்புத்தை அவரது மனைவி முஸ்கன் ரஸ்தோகி, அவரது காதலர் சாஹில் சுக்லா ஆகியோர் சேர்ந்து கொலை செய்தனர். கத்தியால் குத்தியபின், உடலை 15 துண்டுகளாக வெட்டி, நீல நிற டிரம்மில் வைத்து சிமெண்டால் மூடினர். இந்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள்.

பாம்பு சூழ்ச்சி மற்றும் உணவிலேயே மரணம்:
ஏப்ரல் மாதத்தில், மீரட்டின் அக்பர்பூர் சதத் கிராமத்தில் அமித் என்ற இளைஞனை அவரது மனைவி ரவிதா, காதலன் அமர்தீப் ஆகியோர் கழுத்தை நெரித்து கொன்றனர். பின்னர் உடலின் அருகே பாம்பு வைக்கப்பட்டு விபத்து போல நாடகமாடினர். ஆனால் பிரேத பரிசோதனையில் உண்மையான கொலை விவரம் வெளிச்சத்திற்கு வந்தது.

பிப்ரவரி 17: மெயின்புரியில் சாஜித்தை, மனைவி ஆம்னா தனது காதலன் சுமித்துடன் கொலை செய்து, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.

மார்ச் 11: ஆக்ரா மாவட்டத்தில், ஒரு பெண் தனது கணவரை காதலனுடன் சேர்ந்து கொன்று, உடலை 65 கிமீ தொலைவில் வீசினர்.

மார்ச் 25: யூடியூபர் ரவீனா, தனது காதலனுடன் சேர்ந்து கணவர் பிரவீனை கொன்ற வழக்கு.

மேலும் இந்தச் சம்பவங்கள் அனைவரையும் சோகமடையச் செய்கின்றன. காதல் சிக்கல்களில் ஏற்படும் குற்றச் செயல்கள், சமூக விழிப்புணர்வைத் தேவைப்படுத்துகின்றன. இது போன்ற கொடூர சம்பவங்கள் மீண்டும் ஏற்படாதவாறு, சட்டம் மற்றும் சமூக கட்டுப்பாடுகள் வலுவாக அமைய வேண்டும் என்றதே பலரின் கோரிக்கை.