விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரம் வாரம் ஏதாவது தலைப்பு விவாதிக்கப்படும். இந்த நிகழ்ச்சியீல் கடந்த மாதம் ஒளிபரப்பான விவாதத்தில் இளைஞர் ஒருவர் கவனம் பெற்றிருந்தார். அந்த வாரத்தில் தோசை கொண்டாடப்பட வேண்டிய உணவு மற்றும் தோசை சாதாரண உணவு என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒருவர் 25 தோசை சாப்பிடுவாராம் என்று அவருடைய தங்கை அரங்கத்தில் புலம்பினார். இந்த நிகழ்ச்சி வைரலானதை அடுத்து அந்த இளைஞரையே சேனல் பேட்டி எடுத்தது .

இது குறித்து அவர் கொடுத்த நேர்காணலில், உண்மையாகவே 25 தோசையை தேன், பொடி, மேகி மசாலா போன்றவற்றை போட்டு சாப்பிட்டு காண்பித்தார்,. இந்நிலையில் பிரணவ் திடீர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இரவு 10:30 மணியளவில் நண்பர்களோடு சேர்ந்து தண்டவாளத்தை கடக்கும் முயன்ற போது வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். இதில் அவருடைய நண்பர் சதீஷ் என்பவர் உயிரிழந்துள்ளார்.