சேலம் மாவட்டத்தில் திமுக இளைஞரணி மாநாடு நேற்று பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் சுமார் 5 லட்சம் தொண்டர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற தொண்டர்கள் அனைவருக்கும் சைவ மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்பட்டது. இந்தியாவில் இதுவரை நடத்தப்படாத வகையில் இளைஞர் அணி மாநாடு நடத்தப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தொண்டர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை கேட்டுக் கொண்ட அவர், உதயநிதி மட்டுமல்ல நீங்கள் அனைவருமே எனது மகன்கள் தான் என்றும் உங்கள் ஒவ்வொருவரையும் எனது மகனாக கட்சியின் கொள்கை வாரிசுகளாகத்தான் பார்க்கிறேன் என்றும் கூறியுள்ளார்.