கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த மாநாடு கடந்த 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும் என கனடா பிரதமர் மார்க் கர்னி அழைப்பு விடுத்த நிலையில் அதனை ஏற்றுக் கொண்டு பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அவர் உலக தலைவர்களையும் தனித்தனியாக சந்தித்து பேசினார். அந்த வகையில் இத்தாலி பிரதமர் மெலோனியையும் பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இந்தியாவும் இத்தாலியும் மிகப்பெரிய நட்புறவால் இணைக்கப்பட்டுள்ளது என ஜார்ஜியா மெலோனி கூறிய நிலையில் நம்முடைய இரு நாட்டு மக்களின் நன்மைக்காக இந்த நட்பு மேலும் வலுவடைந்து தொடரும் என்றார்.

 

 

அதன் பிறகு நீங்கள்தான் பெஸ்ட். நானும் உங்களைப் போலவே மாற முயற்சி செய்கிறேன் என்று மெலோனி கூறினார். மேலும் பிரதமர் மோடியை அவர் புகழ்ந்து பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.