கவிஞர் வைரமுத்து தலைப்பை முன்வைத்து மகா கவிதை போட்டி ஒன்றை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த போட்டியில் வெற்றிபெறுவோருக்கு பரிசுத் தொகையாக ரூ. 5 லட்சம் கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ள அவர், நாளை காலை 8 மணிக்கு இது பற்றி முழு தகவலையும் தெரிவிக்க உள்ளதாக x தளத்தில் கூறியுள்ளார். அவருடைய இந்த பதிவிற்கு, ரெடியாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் கவிஞர் வைரமுத்துவின் கவிதை நூல்  மகா கவிதை ஆகும். நிலம் – நீர் – தீ – வளி – வெளி எனும் ஐம்பூதங்களையும் ஆராய்ந்து படைத்த கவிதையாக ‘மகா கவிதை’  அறியப்படுகிறது.