வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது லாக்கர் வாடகை ஒப்பந்தத்தை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும். அதன்படி இந்த ஆண்டு லாக்கரை புதுப்பிக்க டிசம்பர் 31ஆம் தேதி கடைசி தேதி ஆகும். 10 முதல் 20% வாடிக்கையாளர்கள் இன்னும் வாடகை ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை என வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தை புதுப்பிக்க தவறும் பட்சத்தில் லாக்கர் வாடகை 100% வரை உயரும் அபாயம் உள்ளது. எனவே நாளை ஒருநாள் மட்டுமே இருப்பதால் உடனே வங்கி லாக்கர் வாடகை ஒப்பந்தத்தை வங்கி வாடிக்கையாளர்கள் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.