
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் மணிரத்தினம் தக்லைப் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் கடந்த 5-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் போதுமான வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் இயக்குனர் மணிரத்தினம் தற்போது படத்தின் தோல்விக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது, ரசிகர்கள் நாயகன் போன்று எதிர்பார்த்ததால் படம் தோல்வியடைந்துவிட்டது. எங்கள் இருவரிடமிருந்தும் இன்னொரு நாயகனை எதிர்பார்த்தவர்களுக்கு நான் சொல்லக்கூடியது என்னவென்றால் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் படம் வெளியான இரண்டு வாரங்களுக்கு பிறகு படத்தின் தோல்விக்காக இயக்குனர் மணிரத்தினம் மன்னிப்பு கேட்டுள்ளது இணையத்தில் பரவலாக பேசப்படுகிறது.