ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் தன்னுடைய முதலாளிக்கு அனுப்பிய மெசேஜ் தற்போது இணையதளத்தில் விவாத பொருளாக மாறி உள்ளது. அதாவது அந்த ஊழியர் ஒரு குறிப்பிட்ட நாளில் தன்னுடைய பணிநேரம் முடிந்த பிறகும் கூடுதல் நேரம் வேலை பார்த்துள்ளார். இதன் காரணமாக நாளைக்கு வேலைக்கு தாமதமாக தான் வருவேன் என்று மெசேஜ் மூலம் தன் முதலாளிக்கு அவர் தெரியப்படுத்தியுள்ளார். அவர் அனுப்பிய மெசேஜில் நான் இன்று அலுவலகத்தை விட்டு 8:30 மணி அளவில் கிளம்பியுள்ளேன்.

இதன் காரணமாக நாளை காலை 11:30 மணியளவில் தான் வேலைக்கு மீண்டும் வருவேன் என்று கூறியுள்ளார். இதனை அந்த முதலாளி தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு கூடுதல் நேரம் அவர் வேலை பார்த்ததால் அதனை ஈடு செய்யும் விதமாக வேலைக்கு தாமதமாக வருவேன் என்று கூறி மெசேஜ் அனுப்பி உள்ளார். இது என்ன ஒரு நடவடிக்கை. இதனை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை என்று நொந்து போய் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலர் ஊழியருக்கு ஆதரவாகவும் சிலர் முதலாளிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.