ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அடித்த ஒரு சிக்சர் போட்டியை படம்பிடித்துக் கொண்டிருந்த கேமரா மேன் மீது திடீரென விழுந்தது. அவருடைய பெயர் தேபாசிஷ். இவருக்கு பந்து மேலே விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரிஷப் பண்ட் போட்டி முடிந்த பிறகு கேமராமேனிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அவர் நான் வேண்டுமென்றே உங்கள் மீது பந்தை அடிக்கவில்லை. அது தெரியாமல் உங்கள் மீது பட்டு விட்டது. நீங்கள் விரைவில் காயத்தில் இருந்து குணமடைவீர்கள் என்று நம்புகிறேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோவை ஐபிஎல் நிர்வாகம் தங்களுடைய x பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ரிஷப் பண்டின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.