உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு டெல்லியைச் சேர்ந்த துஷார் சிங் என்பவர் மூன்று ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். இவர் ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் 18 முதல் 30 வயதுடைய இளம்பெண்களை குறி வைத்து பணம் பறித்து வந்தார். இந்த நிலையில் துஷார் சிங் டேட்டிங் செயலியில் தன்னுடன் பேசும் பெண்களிடம் தன்னை அமெரிக்க மாடல் எனவும், திருமணம் செய்வதற்காக இந்தியா வந்திருப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பி பேசிய பெண்களிடம் இருந்து துஷார் சிங் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புமாறு கேட்டுள்ளார்.

அவர்கள் அனுப்பிய உடன் அந்த வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவேன் என மிரட்டி பல பெண்களிடம் பணம் பறித்துள்ளார். அந்த வகையில் பணத்தை இழந்த டெல்லி பல்கலைக்கழகம் மாணவி ஒருவர் சைபர் கழகம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் துஷார் சிங்கை கைது செய்தனர். அவர் இதுவரை 700 பெண்களை ஏமாற்றியது தெரியவந்ததுm அவரது தொலைபேசி மற்றும் 13 கிரெடிட் கார்டுகளை பறிமுதல் செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.