
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஸ்ரீகாந்த். இவர் 90′ ஸ் கிட்ஸ்களின் சாக்லேட் பாய் ஆக வலம் வந்தவர். நேற்று நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தால் திரையுலகினர் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் – யிடம் போலீசார் விசாரணை நடத்திய போது தான் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என முதலில் கூறினார்.
பின்பு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது அவர் போதை பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரது வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது சுமார் 8 பாக்கெட்டு கொக்கைன் கண்டெடுக்கப்பட்டது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ஸ்ரீகாந்த் -ஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற விசாரணையின் போது தான் போதைப்பொருள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டார். மேலும் தான் தவறு செய்து விட்டேன் என உருக்கமாக பேசிய அவர் தன்னுடைய மகனை பார்த்துக் கொள்வதற்காக தனக்கு ஜாமீன் வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீதிமன்ற விசாரணைக்கு பிறகு ஸ்ரீகாந்த் -ஐ 7 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு முதல் வகுப்பு வழங்கியது ஏன்? என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு நீதிமன்றம் ஸ்ரீகாந்த் முறையாக வருமான வரி செலுத்துவதால் அவருக்கு முதல் வகுப்பு சலுகை வழங்கப்பட்டதாக தெரிவித்தது.