
நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நேற்று மதியம் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து இரவு நீதிமன்றத்தில் ஸ்ரீகாந்த் கூறியதாவது, போதை பொருள் பயன்படுத்தி நான் தவறு செய்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். குடும்பத்தில் பிரச்சனை உள்ளது. வெளிநாடு செல்ல மாட்டேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என கூறி ஜாமீன் கேட்டார்.
அப்போது இங்கு ஜாமீன் பெற முடியாது எனவும் என்டிபிஎஸ் சிறப்பு நீதிமன்றத்தில் தான் ஜாமீன் பெற முடியும் என கூறி வருகிற ஜூலை ஏழாம் தேதி வரை ஸ்ரீகாந்துக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அவரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.