
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் அக்ஷய்குமார். இவர் நடித்து சில படங்கள் வரவேற்பை பெறவில்லை. இதேபோன்று கடைசியாக வெளிவந்த “சர்பிரா” படமும் அந்த அளவு வசூலிக்கவில்லை. இதனால் நடிகர் அக்ஷய குமாரை ரசிகர்கள் பலர் விமர்சித்தனர்.
இந்நிலையில் தற்போது நடித்து வரும் ‘கேல் கேல் மெய்ன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. அப்போது பேசிய அக்ஷய்குமார் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு பதிலளித்தார். அதில் அவர் கூறியதாவது, எது நடந்தாலும் அது நன்மைக்கே, என்னுடைய சில படங்கள் சரியாக வரவில்லை.
இதனால் எனக்கு பல மெசேஜ்கள் வருகின்றன. அவை மன்னிக்கவும் நண்பரே, கவலைப்பட வேண்டாம் என்று அனுப்புகிறார்கள். நான் சாகவில்லை, இந்த மெசேஜை பார்க்கும்போது இரங்கல் செய்தி போல் இருக்கிறது. நான் வேலை செய்து கொண்டே இருப்பேன். மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து எனக்கு தேவையில்லை.
நான் சொந்தமாக சம்பாதிக்க வேண்டும் மற்றவர்களிடமிருந்து பணம் பறிக்கவில்லை என்று கூறினார். தற்போது இவர் நடித்துள்ள ‘கேல் கேல் மெய்ன்’ படம் வருகிற 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.