தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் பாலிவுட்டில் தற்போது சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக சமந்தா வலம் வரும் நிலையில் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இவர் நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் அதிலிருந்து மீண்டு வந்து சினிமாவில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். நடிப்பது மட்டுமின்றி பல்வேறு தொழில்களையும் சமந்தா செய்து வரும் நிலையில் தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். இந்நிலையில் பிரபல நடிகர் வருண் தவானுடன் சேர்ந்து சமந்தா சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்துள்ள நிலையில் அந்த தொடரின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தற்போது கலந்து கொண்டுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரிடம் நீங்கள் வெப் தொடரில் ஸ்பையாக நடித்த நிலையில் நீங்கள் நிஜ வாழ்க்கையிலும் ஒரு ஸ்பையாக இருந்துள்ளீர்களா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சமந்தா நிஜ வாழ்க்கையில் நான் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். நான் அதை செய்யாமல் விட்டது தான் என் வாழ்க்கையில் செய்த தவறு. நான் என்னுடைய நிஜ வாழ்க்கையில் ஒரு ஸ்பை ஆக இல்லாததால் தான் ‌ என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்று கூறினார்.

மேலும் நடிகை சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து பெற்று பிரிந்து விட்ட நிலையில் அவருக்கு சமீபத்தில் நடிகை சோபிதா துலி பாலாவுடன் ‌ திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதற்கு முன்னதாகவே நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.