
நாட்டையே காப்பாற்றிய மாவீரர் டஷி நம்க்யால் தற்போது காலமானார். இவருக்கு 58 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்தார். அதாவது கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் படைகளின் ஊடுருவலை எச்சரித்து கார்கில் போருக்கு காரணமாக இருந்தவர் லடாக் ஷெப்பரெட் என்று அழைக்கப்படும் டஷி நம்க்யால்.
இது தொடர்பாக இந்திய ஆர்மி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், லடாக்கின் துணிச்சலான இதயம். தேசபக்தர் பிரிந்து விட்டார் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு தன்னுடைய மாடுகளை தேடிக்கொண்டிருந்த போது பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுக்குள் ஊடுருவதை பார்த்து இந்திய ஆர்மிக்கு தகவல் கொடுத்தவர். இவருடைய மறைவுக்கு இந்திய அதிகாரிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.