அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரழிவில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள விடுதி மீது விமானம் விழுந்ததும், பயங்கரமாக வெடித்து சிதறியது.

இந்த கொடூர சம்பவத்தில் பலர் உயிரிழந்த நிலையில் விஸ்வாஸ் குமார் என்பவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விமானம் கீழே விழுந்து நொறுங்கியதும் அவசர வழி மூலமாக வெளியே குதித்து விஸ்வாஸ் உயிர் தப்பினார். விமான விபத்தில் லண்டனில் செட்டிலாக சென்ற மருத்துவர, அவரது மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உயிரிழந்தனர்.

இதே போல லண்டனில் இறந்த மனைவியின் அஸ்தியை கரைக்க இந்தியா வந்த அர்ஜுன் என்பவரும் விமான விபத்தில் உயிரிழந்தார். இந்த தம்பதியினருக்கு 8 மற்றும் 4 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.