குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று பிற்பகல் 1:30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் லண்டனுக்கு புறப்பட்ட சென்றது. புறப்பட்ட மூன்று நிமிடங்களிலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

அந்த விமானத்தில் 242 பயணிகளும் 10 பணியாளர்களும் இருந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றது. குஜராத்தின் முன்னால் முதல்வர் விஜய் ரூபானி இந்த விமானத்தில் பயணித்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறிய வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.