கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மணக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். இவர் மேடைப்பேச்சுகளில் வல்லமை வாய்ந்தவர். இலக்கிய பேச்சுகள், பட்டிமன்ற பேச்சுகள், அரசியல் பேச்சுகள் என எல்லாவற்றிலும் மேடைகளில் திறமையாக பேசி மக்களை பேச்சால் தன் வசப்படுத்த கூடியவர் நாஞ்சில் சம்பத். இவர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற நிலையில் திடீரென அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் உறவினர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அப்போது நாஞ்சில் சம்பத்துக்கு மூளையில் ரத்த கசிவு காரணமாக வலிப்பு வந்து ஞாபக மறதி ஏற்பட்டது தெரிய வந்தது. இவர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய நிலையில் மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது சுயநினைவு இல்லாமல் இருக்கும் நாஞ்சில் சம்பத் கன்னியாகுமரியில் உள்ள அரசு மருத்துவமனை கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு நாஞ்சில் சம்பத்துக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், நாஞ்சில் சம்பத் மீண்டும் சுயநினைவுக்கு வர 3 நாட்கள் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.