சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் மும்மொழிக் கொள்கையை ஏற்காத காரணத்தினால் நிதி தராத மத்திய அரசை கண்டித்து தற்போது போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் வேல்முருகன், வைகோ, திருமாவளவன், முத்தரசன், உதயநிதி ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, நாங்க ஒன்னும் உங்க அப்பன் வீட்டுக்கு காசை கேக்கல. பிச்சையோ கடனோ கேட்கவில்லை. தமிழ்நாட்டு மாணவர்களின் பெற்றோர்கள் கட்டிய வரிப்பணத்தை தான் கேட்கிறோம். எங்களுடைய நிதியை நாங்கள் உரிமையோடு கேட்கிறோம்.

நாம் மற்ற மாநிலங்களைப் போன்று மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டு ஹிந்தியை ஏற்றால் நாம் தாய்மொழி தமிழை இழந்து விடுவோம். தமிழ்நாடு மக்களையும் தமிழ்நாடு அரசையும் ஒருபோதும் மிரட்டி பணிய வைக்க முடியாது. இது திராவிட மண் பெரியார் மண் மற்றும் சுயமரியாதை மண் என்று கூறினார். மேலும் முன்னதாக மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டும் தான் தமிழ்நாட்டுக்கு கல்விக்கான நிதியை விடுவிப்போம் என்று கூறிய நிலையில் அதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.