ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு திடீரென பயங்கர தீவு விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெற முடியாமல் மருத்துவமனை வாசலிலேயே 3 பேர் உயிரிழந்தனர்.

அதாவது நள்ளிரவில் இரண்டாவது மாடியில் திடீரெனில் தீ விபத்து ஏற்பட்டதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். கிட்டத்தட்ட 380 க்கும் மேற்பட்ட நோயாளி வெளியே அனுப்பப்பட்ட நிலையில் புகை மூட்டம் மற்றும் மின் இணைப்பு துண்டிப்பு போன்ற பிரச்சனைகளால் நோயாளிகள் மிகவும் அவஸ்தை பெற்றனர். இந்த தீ விபத்து மின் கசிவின் காரணமாக ஏற்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.