உயரத்தில் வேலை செய்வது சாதாரண விஷயம் அல்ல.ஆனால், இதெல்லாம் ஒரு சிலருக்குச் சாதாரணம்தான். அதுபோன்ற ஒரு தொழிலாளி தனது உயிரை பயமின்றி பணிக்காக சவாலாக மாற்றியுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில், ஒரு கட்டடத்தின் பல அடி உயரத்தில், எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல், மகிழ்ச்சியாக வேலை செய்கிறார் ஒரு தொழிலாளி. அவர் இவ்வளவு உயரத்தில் வேலை செய்கின்றபோதும், பயம் எனும் வார்த்தையே அவருக்கு தெரியாதது போல இருக்கிறது. கேமரா பெரிதாக்கியபோது, அவர் புன்னகையுடன் சுறுசுறுப்பாக வேலை செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவை @RealTofanOjha என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது. இதற்கு ஏராளமான பேர் லைக் செய்துள்ளனர்.ஒருவர், “இவர்தான் கத்ரோன்கே கிலாடி உண்மையான வீரர்!” எனப் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “இவரோ யமராஜின் மாப்பிள்ளை போல இருக்கார்” என கலாய்த்து இருக்கிறார்.

இதையடுத்து, பலர் “பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இப்படிச் செய்கிறாரே… இது வீரம் இல்ல, முட்டாள்தனம்” என்றும் கூறி, பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அந்நபரின் துணிச்சலான செயலுக்கு சிலர் கைதட்டியும் வருகின்றனர்.