
கர்நாடக மாநிலத்தில் உள்ள தூமகுரு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மை டாலா என்ற ஏரி அமைந்துள்ளது. ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏரியில் குளித்தும் பாறைகளுக்கு இடையே நின்று செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இந்த நிலையில் ஷிவரனாபுரா கிராமத்தைச் சேர்ந்த ஹம்சா என்ற இளம் பெண் நண்பர்களுடன் சென்றுள்ளார்.
அவர் நண்பர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கால் தவறி ஏரியில் விழுந்து பாறைகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டார். நண்பர்கள் இளம்பெண்ணை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்களும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 12 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு இளம் பெண்ணை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.