
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரியா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் பிரியாவுக்கு தீரஜ் என்ற வாலிபர் அறிமுகமானார். இந்த நிலையில் பிரியா தீரஜை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். ஆனால் தீரஜ் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் பிரியா பழச்சாறில் விஷம் கலந்து கொடுத்து தீரஜை கொலை செய்ய முயன்றார்.
அவர் மயங்கி விழுந்ததும் தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து அவரை தாக்க முயன்றதாகவும் தெரிகிறது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீரஜை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பிரியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.