
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு பெண் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது அவரது ஸ்கூட்டியின் மீது ஒரு ஆட்டோ லேசாக உரசியது. இதனால் அந்த ஆட்டோ ஓட்டுநரை அந்த பெண் செருப்பால் அடித்தார். அந்தப் பெண் அந்த ஆட்டோ ஓட்டுநரை ஹிந்தியில் திட்டிய வாரே செருப்பால் அடித்த நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அந்த பெண்ணுக்கு கண்டனங்கள் குவிந்தது.
A #Hindi-speaking woman slapped a #Kannadiga auto driver with a slipper in #Bengaluru.
According to auto driver’s claim, “She was coming from the wrong side, but she started scolding & hitting me. Please check the nearby CCTV footage to see who is actually at fault!” he added. pic.twitter.com/bSRZV9Eg5W
— Safa 🇮🇳 (@safaspeaks) May 31, 2025
அந்த ஆட்டோ ஓட்டுநர் வண்டியின் மீது இடிக்கவில்லை என விளக்கம் கொடுத்தும் அந்த பெண் அதனை கேட்காமல் வீடியோ எடுத்தாலும் பரவாயில்லை என சொல்லிக்கொண்டே அவரை செருப்பால் அடித்தார். அந்த ஓட்டுநர் அமைதியாக இருந்தும் கூட அந்த பெண் விடாமல் இப்படி தாக்கியது கண்டனத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விவகாரத்தில் வட மாநில பெண்ணின் மீது தான் தவறு இருப்பதாக போலீசார் உறுதி செய்த நிலையில் அவரை கைது செய்து பின்னர் ஜாமினில் வெளியே விட்டனர். இந்நிலையில் தற்போது அந்த பெண்ணும் அவரது கணவரும் ஆட்டோ ஓட்டுநரின் காலில் விழுந்து தாங்கள் செய்த செயலுக்காக மன்னிப்பு கேட்டுள்ளனர்.
Woman Who Assaulted Auto Driver in Bellandur Apologizes, Cites Pregnancy and Fear for Safety
In a recent incident that went viral across social media platforms, a woman was seen physically assaulting an auto-rickshaw driver in Bellandur, Bengaluru, drawing sharp criticism from… pic.twitter.com/5PmOfDnKZl
— Karnataka Portfolio (@karnatakaportf) June 2, 2025
மேலும் தாங்கள் செய்தது தவறு என ஒப்புக்கொண்ட அவர்கள் அவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.