
ரேணுகாசாமி என்பவர் கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் மற்றும் அவரது காதலியும், நடிகையுமான பவித்ரா கவுடா ஆகியோர் சமீபத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், தற்போது தர்ஷனின் மேலாளர் ஸ்ரீதர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பெங்களூரில்ல் உள்ள தர்ஷனின் பண்ணை வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனிமையில் இருந்ததன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொள்வதாக தற்கொலைக் கடிதம் மற்றும் வீடியோவும் சிக்கியுள்ளது. கொலை வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே தர்ஷனின் மேலாளர் தற்கொலை செய்து கொண்டது காவல்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.