நடிகர் சல்மான்கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கி சூடு நடந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கிடைத்த தகவலின் படி பைக்கில் இரண்டு ஆசாமிகள் வந்துள்ளனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 4.55 மணிக்கு நடந்துள்ளது. சம்பவத்தை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கடந்த காலங்களில் சல்மான் கானுக்கு பல கொலை மிரட்டல்கள் வந்துள்ள நிலையில் திட்டமிட்டு இந்த அச்சுறுத்தல் நிகழ்த்தப்பட்டதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.